பரபரப்பு: வேலூரில் முதல்வர் பிரச்சாரம்.. துப்பாக்கியுடன் மர்ம நபர் கைது..!
Vellore Youngster Arrest with Gun Near Ranipet Tamilnadu CM Election Campaign
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்த மர்ம நபர், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இவரை உடனடியாக துரத்திப்பிடித்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை செய்கையில், அவரின் பெயர் அஜித் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது காரில் சோதனை செய்கையில், கைத்துப்பாக்கி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், துப்பாக்கியுடன் வாலிபர் கைதானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் காரில் பயன்படுத்திய எண் போலி பதிவெண் கொண்ட வாகனம் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மதுபோதையில் இருப்பதால், காவல் துறையினரின் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Vellore Youngster Arrest with Gun Near Ranipet Tamilnadu CM Election Campaign