தனியார் மருத்துவமனையின் அலட்சியம்?... கர்ப்பிணி பெண், குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால், கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தை உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி போலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே, உறவினர்கள் சத்துவாச்சாரியில் உள்ள சந்தியா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகாலட்சுமிக்கு, நேற்று இரவு பெண் குழந்தை இறந்து பிறந்தது. இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தெரிவித்த சில மணித்துளிகளுக்கு உள்ளாகவே, மகாலட்சுமியும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் உரிய பதில் வராமல் இருக்கவே, இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் தவறான சிகிச்சையால் தங்களது பிள்ளைகளை இழந்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சத்துவாச்சேரி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, மகாலட்சுமியின் குடும்பத்தினர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Sathuvachari Pregnant girl Mahalatsumi Admit Sandhiya Hospital she and Baby Died Relations Protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->