ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த சிறுமிகள்.. திடீரென அதிகரித்த வெள்ள நீர்.. அரங்கேறிய சோகம்.!!
Vellore Pernambut two child girl died in river
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டை அடுத்துள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சார்ந்தவர் ஜானகி ராமன். இவரது மனைவி யுவராணி. இவர்களின் எட்டு வயதான மகள் கீர்த்தனா, அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இதே பகுதியை சார்ந்த முரளி என்பவரின் மகள் பாவனா (வயது 12). சிறுமி பாவனா அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள தடுப்பணையில் மழை காரணமாக 25 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்துள்ளது.
இதனை வேடிக்கை பார்த்துவிட்டு, அருகில் இருக்கும் கானாற்றில் குளித்து, துணிகளை துவைக்க அப்பகுதி பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 20 பேர் அங்கு சென்றுள்ளனர். அவர்களுடன் கீர்த்தனா மற்றும் பாவனாவும் சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில், கீர்த்தனாவும், பாவனாவும் ஆற்றில் இறங்கி விளையாடவே, திடீரென அதிகரித்த நீர் வரத்தின் காரணமாக சிறுமிகள் இருவரும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் அபயக்குரல் எழுப்பவே, ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் சிறுமிகளை மீட்டுள்ளனர்.
இருவரையும் அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில், கீர்த்தனா சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பாவனா வேலூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி மழைக்காலம் என்பதால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Vellore Pernambut two child girl died in river