#திருப்பூர் | தலையில் காயம்., புதரில் பிணம் - இளம்பெண் கற்பழித்து படுகொலையா?  - Seithipunal
Seithipunal


வெள்ளக்கோவில் அருகே பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளம் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த காட்டுப் பகுதியில் இன்று காலை இளம் பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட போலீசார், இந்த பெண்ணின் தலையில் பலத்த காயும் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த இளம் பெண் கொலை தான் செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த இளம் பெண் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஊதியூர் காரியகவுண்டன்புதூர் கண்ணன்காட்டு தோட்ட ரத்தினசாமி என்பவரின் மனைவி ரேவதி (வயது 35) என்பது தெரிய வந்தது.

இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும், நேற்று மாலை பணி முடிந்து வரும் வழியில், ரேவதியை வழி மறுத்த மர்ம நபர்கள், அவரை கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடு போகாத காரணத்தினால், கற்பழித்து அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellakovil young lady mystery dead


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->