பொங்கல் பண்டிகை எதிரொலி - களைகட்டும் காய்கறி விற்பனை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்வதும் குறைவதுமாகவே உள்ளது. அதற்கு காரணம், பருவமழையால், விளைச்சல் பாதிக்கப்பட்டது தான். இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 15- ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 

இதனால், காய்கறிகள், பூக்களின் விற்பனை கலைக்கட்டியுள்ளது. அந்த வகையில், நெல்லை உழவர் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது:- தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களின் கூட்டம் அலைமோதுவதால் வியாபாரிகள் திண்டாடி வருகின்றனர்" என்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vegetable sales increase in nellai uzhavar market


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->