பிரபல சாராய வியாபாரி வீரபாண்டி சுரேஷ் கைது.!
veerapandi suresh arrest
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பகுதியை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் கள்ள சாராய விற்பனை நடந்து வருவதாக அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல்துறையினர் வீரபாண்டி கிராமத்தில் வாகன சோதனையின் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.
இதன் பின்னர், காவல்துறையினர் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் 60 லிட்டர் சாராயம் எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், காவல்துறையினர் 60 லிட்டர் சாராயம் மற்றும் அதனை கடத்தி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரித்த போது அவர் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்றும், திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதன் பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.