ரயிலை மறித்து விசிகவினர் போராட்டம்.!
vck parties protest in vilupuram
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் போல் நுழைந்து இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், அவையை நடத்தவிடாமல் இடையூறு செய்வதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த கனிமொழி, ஜோதிமணி, திருமாவளவன் உள்ளிட்ட எம்பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன படி இன்று காலை, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் புதுச்சேரி - விழுப்புரம் ரயிலை மறித்து 200க்கும் மேற்பட்ட விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விசிகவினரை கைது செய்தனர். விசிகவினர் இந்தப் போராட்டத்தால் ரயில் தாமதமாக புறப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
English Summary
vck parties protest in vilupuram