தருமபுரி : முதல்முறை பேருந்துவசதி., பெருமையுடன் பயணித்த திமுக அமைச்சர்கள்.! - Seithipunal
Seithipunal



தருமபுரி மாவட்டம், வத்தமலை கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

வத்தமலை கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து சேவையை அமைச்சர்கள் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்து பயணம் செய்தனர். இதன் வீடியோ பதிவை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

"நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் இணைந்து, தருமபுரி மாவட்டத்தில் மினி ஊட்டி என்று அழைக்கப்படும் வத்தல்மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவையை தொடங்கி வைத்து பயணித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaththamalai bus facility


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->