வெற்றிடம் எல்லாம் இல்ல.. வேலைய பாருங்க..- வைகோ அதிரடி..!
vaiko says no space
திமுகவில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி விட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.இந்த நிலையில் இதனை நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமலஹாசன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
ஆனால், அரசியல் கட்சியினர் இதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அதிமுக அமைச்சர்கள் பலரும் அந்த வெற்றிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எப்போதோ நிரப்பி விட்டார் என்று தெரிவித்தனர். இதற்கு முதல்வரும் தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத் தேர்தல் நிரூபித்து இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கருத்து மோதல் காரணமாக அதிமுக தரப்பினர் வெற்றிடம் என்பது தமிழகத்தில் இல்லை திமுகவில் தான் இருக்கின்றது. திமுகவில் தான் தலைமைக்கு பஞ்சம் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப எவருமில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதியின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் எப்போதோ நிரப்பி விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தங்களுடைய கூட்டணி திமுகவுடன் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.