காதலி மீது சந்தேகம்.. பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த காமுக காதலன்.!
Uttar Pradesh Love girl Murder by Love boy and abuse police investigation
காதலியின் மீதான சந்தேகத்தால், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியை சார்ந்த 15 வயது சிறுமியும், 21 வயது காமுக வாலிபனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காமுக காதலனுக்கு தனது காதலியின் மீது சநேதகம் இருந்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி சிறுமி தனது தாயுடன் சந்தைக்கு சென்ற நிலையில், திடீரென அங்கிருந்து மாயமாகியுள்ளார். மகளை காணாது தவித்துப்போன தாய், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், சிறுமியின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில், காமுகனை கைது செய்துள்ளனர். விசாரணையில், காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, கொலை செய்து விட்டேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
மேலும், காதலியின் மீதுள்ள சந்தேகத்தால் அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளான். இதனையடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காமுகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh Love girl Murder by Love boy and abuse police investigation