தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - நிர்மலா சீதாராமன் கரூர் வருகை.!!
union minister nirmala seetharaman come to karoor
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அரசியல் கட்சி தலைவர்கள் உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார். அங்கு அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பார்க்கிறார். இவருடன் எல். முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் செல்கிறார்கள்.
English Summary
union minister nirmala seetharaman come to karoor