இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர்கள் ஆனந்தராஜ்(47) மற்றும் சாமுவேல்(40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திசையன்விளையில் இருந்து களக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது குமாரபுரம் அருகே சென்ற போது எதிரே பொத்தக் காலன் விளையை சேர்ந்த பிரான்சிஸ் (35) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், இவர்கள் இருவரும் சென்ற இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த ஆனந்தராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheelers collided in Tirunelveli


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->