தர்மபுரி: இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்தில் மளிகை கடைக்காரர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கும்பார அள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மகள் கோமதி.

இந்நிலையில் கோமதிக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று காலை தந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டு, பின்பு அங்கிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது தேசிய நெடுஞ்சாலை நல்லாம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த கோமதியை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் விபத்திலும் உயிரிழந்த சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler tractor accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->