3-வது கட்ட தேர்தலில் பாஜக துடைத்து எறியப்படும் - அகிலேஷ் யாதவ்!!
BJP will be swept away in the 3rd phase of elections Akhilesh Yadav
மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குபதிவை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் படானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சமாஜ்வாஜ் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், மே 7ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது கட்ட தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் ஏழு மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவார்கள். இந்த தேர்தலில் அவர்களை மக்கள் முழுமையாக துரத்தி எறியப்படுவார்கள். முதல் இரண்டு கட்டத்தில் பாஜகவை மக்களை கவிழ்த்தனர். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கபடும் என்ன பாஜக வாக்களித்துள்ளது. ஆனால், விவசாயிகள் தங்கள் வருவாயை கணக்கிட்டால் கவலையும் மிஞ்சும். உற்பத்திக்கான செலவை அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
English Summary
BJP will be swept away in the 3rd phase of elections Akhilesh Yadav