இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் மணிகண்டன் (22). இவர் நேற்று இரவு நாமகிரிப்பேட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது நாமகிரிப்பேட்டை ராசிபுரம் சாலையில் மெக்கானிக் பட்டறை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாமகிரிப்பேட்டை காவல் துறையினர், உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler accident in namakkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->