ரயிலில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்கள் கைது! - Seithipunal
Seithipunal


அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு வெளி மாநிலம் ஒன்றிலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.

அப்போது, ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் இருந்து இரண்டு வாலிபர்கள் பார்சலுடன் கீழே இறங்கியதை பார்த்து, போலீசாரை கண்டு அவர்கள் பார்சலை விட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர்.

போலீசாரின் திடீர் நடவடிக்கையில் அவர்களை மடக்கி பிடித்து, பார்சலை சோதித்தபோது அதில் கஞ்சா இருந்தது. விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வசுப் குப்தா (19) மற்றும் சோனு (19) என்பவராக அடையாளம் காணப்பட்டனர். இவர்களிடம் கஞ்சா வாங்கி வரும்படி சென்னையில் உள்ள சில நபர்கள் கூறியிருந்தனர். இதன் பேரில், அவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே, போலீசார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தல் நபர்களை விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two youths arrested for smuggling ganja in train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->