திருப்பூர் || 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு - புகாரால் சிக்கிய முதியவர், நர்ஸ் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பதினான்கு வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக முதியவர் மற்றும் செவிலியர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, மூலனுார் அருகே எருகாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர் 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான அந்த சிறுமி சம்பவம் குறித்து ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ராஜேந்திரன், தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக உள்ள உஷாராணி, என்பவரை அணுகி, சிறுமியின் கருவை கலைக்க செய்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், சிறுமியை மிரட்டியுள்ளார்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட சிறுமி, தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன், உஷாராணி உள்ளிட்டோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for abortion to girl in tirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->