தூத்துக்குடியில் சைக்கிளில் சென்று ரோந்து பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி பாலாஜி சரவணன்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை, கடத்தல் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்தும் வாகன சோதனைகள் நடத்த அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீசாரின் இந்த ரோந்துப்பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

 

அதற்காக அவர் சைக்கிளில் ரோந்து சென்று மீன்பிடி துறைமுகம், ரோச் பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். 

மேலும், அவர் திடீரென மத்தியபாகம் காவல் நிலையத்திற்கும் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கி வந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tuticorin sb visit patroling work of police at bicycle


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->