பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டி.டி.வி. தினகரன்.! - Seithipunal
Seithipunal


விஜயகாந்த் மறைவையொட்டி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் டி.டி.வி. தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

இந்த சந்திப்பானது சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள சுதீஷன் இல்லத்தில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு அன்றைய நாள் என்னால் வர முடியவில்லை.

ஆதலால் இன்றைக்கு பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து பின்னர், விஜயகாந்த் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். 

மறைந்த விஜயகாந்த்-க்கு பொது இடத்தில் அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran meet Premalatha Vijayakanth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->