#BREAKING | திருச்சியில் முக்கிய அரசியல் புள்ளி வீட்டில் ஐடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


திருச்சியில் பிரபல அரசியல் புள்ளி வீர சக்தி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேக்ஸ் நிறுவன பங்குதாரரும், திருச்சி தில்லை நகர் ஆப்பிள் மில்லட் உரிமையாளருமான வீர சக்தி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் வேட்பாளராக களம் இறங்கியவர் வீர சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோல் கரூர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீட்டிலும், வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது இவரது வீடு சீல் வைக்கப்பட்டது. அந்த சீலை தற்போது அகற்றிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy IT Raid in VeeraSakthi home


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->