தப்பே செய்தாலும் அவன் என்னவன்.. காதலை ஏற்க மறுத்ததால், உயிரை மாய்த்த மாணவி.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். உடையான்பட்டி பகுதியை சார்ந்த 17 வயது மாணவர் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் சுப்பிரமணியபுரம் தேர்வு மையத்தில், கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுத சென்றுள்ளனர். அங்கு இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. 

இதனால் பிரிந்து செல்ல முயற்சித்தும், அவனின் தொல்லை தாங்காது அங்குள்ள காவல் நிலையத்தில் மே மாதம் 19 ஆம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவன் ஜாமினில் வெளியே வந்ததை அறிந்த மாணவி, அவருக்கு தொடர்பு கொண்டு தான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், காதலும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று கூறி அலைபேசியை ஸ்விச் ஆப் செய்துள்ளார். 

இதனையடுத்து கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy girl Suicide Police investigation due to Love Failure


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->