ஸ்டாலின் மேடையில் உறுதிமொழி எடுக்க, வாகனத்தை நிறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட திமுக உ.பி.! அடாவடி அராஜகம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாநாட்டிற்கு வந்த திமுக உடன்பிறப்பு, பெரம்பலூர் அருகே காரை நிறுத்தி ஆர்.டி.ஓ என கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள அனுமந்தன்பட்டி பகுதியை சார்ந்தவர் வீரண்ணன். இவரது மகன் செல்வகுமார் (வயது 45). இவர் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று திமுக சார்பில் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாநாட்டிற்கு செல்வகுமார் வந்துள்ளார். 

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், ஆர்.டி.ஓ என்று கூறி வாகன ஒட்டியிடம் வசூல் செய்துள்ளார். அவரிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த சிலர், பின்னர் சுதாரித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வகுமாரை மடக்கி பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நான் திமுக இளைஞரணி உறுப்பினர் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். 

மேலும், செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், வாகனத்தை நிறுத்தி ஆர்.டி.ஓ என்று கூறி பண வசூலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செல்வகுமார் வந்திருந்த இன்னோவா காரையும் காவல் துறையினர் கைப்பற்றிய நிலையில், அதில் மு.க. ஸ்டாலினின் ஸ்டிக்கர் மற்றும் திமுக கொடி இருந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy DMK Meeting Went DMK Theni Supporter Making robbery Name of RTO Officer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->