#JustIN: திருச்சி சிறுமி எரித்து கொலை.. டி.ஐ.ஜி ஆனி விஜயா பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியை சார்ந்த பெரியசாமி மகள் கங்காதேவி (வயது 14), கடந்த (6 ஜூலை 2020) அன்று அங்குள்ள முள்காட்டு பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் தலைமையில் 11 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவில், அவர் பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில், திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டியுள்ளார். 

இது குறித்த பேட்டியில், " அப்பகுதி மக்களிடையே விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை.. முதலில் ஆவேசப்பட்ட அனைவரும் பின்னர் பின்வாங்கி வருகின்றனர். திட்டமிட்டு இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்.. மக்கள் எதையோ மறைக்கின்றனர். 

அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காதது எங்களுக்கு பிரச்சனையை அதிகப்படுத்தினால், நாட்கள் மட்டுமே அதிகமாகும். இறுதியில் நாங்கள் உண்மையை கண்டறிவோம். தவறு செய்தவர்களை நாங்கள் கட்டாயம் கண்டறிவோம். நாங்களும் பிள்ளைகளை பெற்றவர்கள் தான். பெற்றோரின் வலி என்ன என்பது எங்களுக்கும் தெரியும். 

சிறுவயதுள்ள பெண் குழந்தைகளின் மீது நடைபெறும் வன்முறை குற்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. தவறு செய்தவர்களுக்கு நாங்கள் கட்டாயம் தண்டனையை வாங்கி தருவோம் " என்று கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy DIG Aanie Vijaya press meet about Trichy girl burned murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->