வாய் தகராறுக்கு பழிவாங்குவதாக எண்ணி, பச்சிளம் ஜீவன்களை கொன்று குவித்த கொடூரம்.. திருச்சியில் பயங்கரம்.!
TRICHY COW AND GOAT MURDER BY POISON DUE TO NEIGHBOURHOOD FIGHT
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் திம்முராயசமுத்திரம் புதுகாலனி பகுதியை சார்ந்தவர் கங்காதரன். இவரது இல்லத்தில் ஆடு மற்றும் மாடுகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கும் - அண்டை வீட்டில் வசித்து வந்த சுப்புலட்சுமி (வயது 52) என்ற நபரின் குடும்பத்திற்கும் இடையே வாய்த்தகராறு பிரச்சனை இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக குப்பை எரிப்பதில் சண்டை ஏற்பட்ட நிலையில், இதனை வைத்து கங்காதரனை பழிவாங்கும் பொருட்டு அவர் வளர்த்து வந்த ஆடு, மாடுகளுக்கு குருணை பவுடர் கலந்த அரிசியை சுப்புலட்சுமி வைத்துள்ளார்.
ஐந்தறிவு பச்சிளம் ஜீவன்கள் உணவாக குருணை மருந்து கலக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு, அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மொத்தமாக 6 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சுப்புலெட்சுமியை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
TRICHY COW AND GOAT MURDER BY POISON DUE TO NEIGHBOURHOOD FIGHT