தமிழகத்தையே பரபரப்பாக்கிய திருச்சி சிறுமி கொலை வழக்கு.. இறுதி விசாரணையில் திருப்பம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அதவத்தூர்பாளையம் பகுதியை சார்ந்தவர் பெரியசாமி. இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கங்காதேவி (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குப்பைகளை கொட்ட சென்ற சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தவே, இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில், சிறுமியின் உடல் கிடைப்பதாக அடையாளம் காண்பித்த 2 உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

துவக்கத்தில் கொந்தளித்த உறவினர்கள் அனைவரும் பின்னாளில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தனர். இதனால் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், குற்றவாளிகளை எப்படியும் கைது செய்வோம் என்று காவல்துறை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேலும், பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் அல்லது தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு உறுதி ஆகாதது தெரியவந்ததை அடுத்து, உறவினர் செந்தில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறுமிக்கு செந்தில் அண்ணன் உறவுமுறையாக இருந்த நிலையில், இவர்களின் பழக்கத்தால் ஏற்பட்ட மனமுடைவில் சிறுமி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy child murder case police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->