மழை என்றும் பாராமல் போக்குவரத்துக்கு காவலர் செய்த வேலை..!
traffic police officer does his work on rain
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் கடும் மழையையும் கண்டுகொள்ளாமல் போக்குவரத்து காவலர் ஒருவர் முழு ஈடுபாடுடன் பணியில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
அருப்புக்கோட்டை பகுதியில் நேற்று மாலை வெப்பச்சலனம் காரணமாக பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. கடும் மழை கொட்டி தீர்த்தது.
அப்போது அருப்புக்கோட்டை - தூத்துக்குடி சாலையில் உள்ள எம்.எஸ்.கார்னர் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் செல்வகுமார் என்பவர் மழையால் வாகனங்கள் எதுவும் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கடும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து பணியில் துரிதமாக ஈடுபட்டார்.
எம்.எஸ்.கார்னர் சந்திப்பு என்பது இப்பகுதியில் அதிகமான வாகனங்கள் செல்லும் சாலைகளில் ஒன்று என்பதால் இவர் மேற்கொண்ட இந்த பணியை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
மேலும் நேற்று இவர் பணியில் ஈடுபட்டிருந்த வீடியோவை அப்பகுதி இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
traffic police officer does his work on rain