டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! இளைஞர் பலி
Tractor twowheeler accident
டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகானபள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி(21). இவர் இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது பவர்க்ரிட் அருகே, சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுரளி தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த முரளியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் முரளி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tractor twowheeler accident