டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! இளைஞர் பலி - Seithipunal
Seithipunal


டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகானபள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி(21). இவர் இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது பவர்க்ரிட் அருகே, சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுரளி தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த முரளியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் முரளி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tractor twowheeler accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->