குஷியில் சுற்றுலா பயணிகள்!!! 1000 கன அடியாக அதிகரித்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...!
Tourists in awe Dharmapuri Hogenakkal water flow increased to 1000 cubic feet
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.இதனிடையே, நேற்று நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. மேலும், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1000 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
அங்கு மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர். அதுமட்டுமின்றி மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Tourists in awe Dharmapuri Hogenakkal water flow increased to 1000 cubic feet