சென்னையில் நாளை 2000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு.!
Tomorrow vaccine camp in Chennai
சென்னையில் நாளை 2000 இடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2000 முகாம் நடத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் கொரோனா இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம் என்றும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow vaccine camp in Chennai