#BREAKING || நாளை முதல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை.!!
Tomato sales at affordable prices in ration shops from tomorrow
இந்தியா முழுவதும் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி வரதுக்கு குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த கொள்முதல் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலை இன்று ஒரே நாளில் 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
English Summary
Tomato sales at affordable prices in ration shops from tomorrow