பாஜக விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.! - Seithipunal
Seithipunal


தென்னை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா இரண்டு தேங்காய்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தப் போராட்டம் கோவை மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:- "தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தேங்காய் விலை வெகுவாக சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதனால் அவர்களை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா இரண்டு தேங்காய்கள் வழங்க வேண்டும். 

இதனை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் பா.ஜ.க விவசாய அணி சார்பில் நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

அதேபோன்று பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக  தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.

பல பிரச்சனைகளால் நஷ்டத்தில் இயங்கி வரும் தேங்காய் மட்டை தொழிற்சாலைகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு தனிக்குழு ஒன்று அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomarrow bjp agri team Demonstration in whole tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->