#BREAKING : கனமழை எதிரொலி.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
Today holiday for kallakuruchi district due to heavy rain
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், இன்று நீலகிரி, திருவள்ளூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, விருதுநகர், மதுரை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் உட்பட 15 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று (13.12.2022) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Today holiday for kallakuruchi district due to heavy rain