இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜாகுவாரா நடிகை விஜயலட்சுமி? - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி சீமான் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமியை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், சீமான் மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற முறையீட்டின் அடிப்படையில், இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

அதனால், பழைய உத்தரவின்படி விஜயலட்சுமி இன்று ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு ஆஜரானால், இந்த வழக்கில் நீதிபதி என்ன தீர்ப்பளிப்பார் என்று பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing of vijayalakshmi and seeman case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->