மீண்டும் விசாரணைக்கு வருகிறது செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டார். இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் எந்த இலக்காக்களும் ஒதுக்கப்படாமல் இலாகா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார். மேலும் அவர், கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்து வரும் சூழலில் தனது அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக அமைச்சராக இருப்பவர் வெளியில் வந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை கலைப்பார் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றங்களில் வலியுறுத்தி வந்த நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். 

ஆகவே, இன்று நடைபெறும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தனது வாதங்களை செந்தில்பாலாஜி தரப்பினர் முன்வைப்பர் என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today hearing of sendhil balaji bail case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->