பணிமனை திரும்பும் பேருந்துகள்.. போராட்டத்தை தொடங்கிய தொழிலாளர்கள்.!! ஸ்தம்பிக்குமா தமிழகம்.?
tnstc Workers started protest
தமிழகம் முழுவதும் இரவு 12 மணி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் படிப்படியாக பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசுடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் அரசு பேருந்துகள் படிப்படியாக பணிமனைக்கு திரும்பி வருகின்றன. இன்று இரவு முதல் பேருந்துகள் இயக்கம் முழுமையாக நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி திருச்சியில் பேருந்து இயக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று திருவான்மியூர் பணிமனைக்கு அரசு பேருந்துகள் அனைத்தும் திரும்பி வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
tnstc Workers started protest