இன்று கோலாகலமாக கோயம்புத்தூரில் தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று கோலாகலமாக கோயம்புத்தூரில் தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி.!

கோயம்புத்தூரில் இன்று டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியைக் காண்பதற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இன்று தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஜூலை 12-ம் தேதி வரை கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், நெல்லை என்று பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதன் இறுதிப் போட்டி வருகிற 12-ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது. 

இந்த டிஎன்பிஎல் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். இதில், சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும்.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு கோயம்புத்தூர் நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் உள்ளிட்ட இரு அணிகள் மோதுகின்றன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPL cricket match start from today in coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->