ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்... கூட்டுறவு துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வரும் விற்பனையாளர்கள், எடையாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் ஆகியோருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் மண்டல இணை பதிவாளர்கள் கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கு சுற்றி அறிக்கை அனுப்பியுள்ளனர்.

அந்த சுற்றறிக்கையில் தங்கள் மண்டலத்தில் பணியாற்றி வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட பதவி உயர்வு குறித்து முழு விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த விவரத்தின் அடிப்படையில் பதவி உயர்வு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கையால் தமிழக முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tngovt order to submit report on promotion granted to ration shop employees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->