#Breaking :: அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பாணையை ரத்து..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 4,000 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பழைய அரசாணையை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt College Assistant Professor Vacancy Notification Cancelled


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->