தமிழகத்தில் 48 கோயில்களில் இலவச நீர்மோர்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள 48 முதல் நிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, மோர், நுங்கு போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். 

சென்னை, மண்ணடியில் உருது பள்ளியில் வகுப்பறைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, 

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள 48 கோவில்களில் பக்தர்களுக்காக இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

வெயிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு நீர்மோர் பந்தல், மேட்தரை போன்ற வசதிகள் செய்து தரப்பட உள்ளது. 

பொதுமக்களின் தேவைகளை முதலமைச்சர் நன்கு அறிந்ததால் வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Temples providing free water


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->