அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு...!! ஆனால் 5ம் வகுப்பு வரை விடுமுறை...!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தன. இதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் தொடங்குகின்றன. 

அந்த வகையில் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் வழக்கம்போல் வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn Schools will open today after exam holiday


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->