பொங்கல் பண்டிகை நாட்கள் : மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்.!
tn rain update jan 14
சென்னை வானிலை இயக்குனர் முனைவர் நா . புவியரசன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, நாளை மறுநாள் (15.01.2022 , 16.01.2022) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகின்ற 17.01.2022, 18.01.2022 ஆகிய நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று சென்னை வானிலை இயக்குனர் முனைவர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.