ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கலுக்கு அரசு பேருந்துகள் இயங்கும்.!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மணல் குவாரி கலவரம் தொடர்பாக கடலுார் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்"கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சில் முன்னவைக்கப்பட்ட போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதற்கு முதல்வர் வழங்கும் நிதியே காரணம். டீசல் மானியம், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாணவர்களுக்கு இலவச பாஸ் போன்றவற்றுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளமும் அரசு வழங்கும் நிதி வாயிலாகவே வழங்கப்படுகிறது.


பொங்கல் சமயத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது. பொங்கல் பண்டிகை நேரத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஓய்வூதியர்கள் அகவிலைப்படி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து
வழங்கப்படவில்லை. அப்போதெல்லாம் கேட்காத தொழிற்சங்கத்தினர், இப்போது கேட்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. பொங்கல் பண்டிகையின் போது தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn minister said even strike buses will run to Pongal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->