#BREAKING || தமிழகத்தில் ஜனவரி 31 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிப்பு.! சற்றுமுன் தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறப்பித்திருந்தார்.

அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கும் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று உடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், சற்று முன் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பின்படி,

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

1. 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

2. 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.

3. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

 

பொது அறிவுரைகள் : இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவனை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சத்திகரிப்பான்கள் ( Hand Sanitizer with Dispenser ) கட்டாபமாக வைக்கப்படுவதோடு . உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் { Thermal Screening ). 

கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள். உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும் அண்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் 

• நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ( Test - Truck - Treat Vaccination - Covid - 19 Appropriate Behaviour ) đầu கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். 

* கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை ( Micro Leven செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். 

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். 

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் தோ பொருட்கள் வழங்குதல் தவிர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. 

* நோய்க் POLY தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும். 

* கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய்த் கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். 

தற்போது கெரோனா நோய் வேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். 

தொழிற்சாலைகள், வணிசு நிறுவனங்கள். தனியார் . நிறுவனப்பட ஆகியவற்றில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். 

கொரோன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரம் வணிக நிறுவனங்கள் / கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடகடிக்கை எடுக்க வேண்டும். 

பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், இருப்பினும், பொதுமக்கள் அத்தியாவரியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.

பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூசு இடைவெளியினை கடைபிடித்து இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொண்டால், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளூம் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN LOCKDOWN TAMILNADU PONGAL 2022 jan 31


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->