தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு வரும் 31 ஆம் தேதிவரையா?! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறப்பித்திருந்தார்.

அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கும் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று உடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், சற்று முன் வெளியான தகவலின் படி, தமிழகத்தில் வரும் ஜனவரி 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், வெளியான தகவலின் படி, ஜனவரி 31 ஆம் தேதிவரை இரவு ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை (16 ஆம் தேதி) அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், ஜனவரி 31 ஆம் தேதிவரை அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து எனவும்,   (மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்) , ஒன்று முதல் 9 வகுப்புவரை  ஜனவரி 31 ஆம் தேதிவரை அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து எனவும் தகவல் வெளியாகியுள்ளது. (10,11,12 வகுப்புகள் நடைபெறும்)

மேலும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.

இது அதிகாரபூர்வ அறிவிப்பு செய்தி இல்லை., வெளியான தகவலின் அடிப்படையில் மட்டுமே சொல்லப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN LOCKDOWN TAMILNADU PONGAL 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->