மின்சார ஏ.சி. பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர்: அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக போக்குவரத்து துறைக்கு 100 மின்சார ஏ.சி. பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலை மாசு படுத்தாத வகையில் நகர்ப்புற போக்குவரத்து பயன்பாட்டிற்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

அதன்படி, தற்போது 100 ஏ.சி. மின்சார பேருந்துகள் வாங்குவதற்காக அரசு கோரி உள்ளது. மேலும் மின்சார பேருந்துகளுடன் சார்ஜிங் தீர்வு மற்றும் டிப்போ மேம்பாடு பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் மின்சார ஏ.சி. பேருந்துகள் வழங்கும் நிறுவனம் அதனையும் அமைத்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt announced electric ac buses tender


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->