#Breaking: மக்களுக்கான அரசாக எனது அரசு செயல்படும் - முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதற்கு பின்னர் முதல் முறையாக திமுக கட்சியினருக்கு மடல் எழுதியுள்ளார். 

இது குறித்த மடலில், " தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும். மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என்று மு.க ஸ்டாலின் ஆகிய நான் உறுதி அளிக்கிறேன். சவால்களையும், நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு நல்லாட்சியை வழங்குவேன். 

ஜனநாயக காலத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிக்கொள்வது இயல்பானது என்றாலும், நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கான அரசாக திமுக தலைமையிலான எனது அரசு செய்யப்படும். 

தமிழகத்தை தரணியிலே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே எனது இலக்கு. பதவியேறிருக்கும் தருணம் கடுமையான சூழலை கொண்டதாக அமைந்துள்ளது காலத்தின் சவால். அதனை எதிர்கொண்டு வெற்றி அடைவோம் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin Letter to DMK Supporters 9 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->