மக்களை மறந்துவிட்டு, பொய் பேசிவரும் மு.க ஸ்டாலின் - தமிழக முதல்வர் குற்றச்சாட்டு..!
TN CM Edappadi Palanisamy Election Campaign at Tirumangalam 25 March 2021
மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை கூறாமல், மு.க மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை ஆதரித்து செக்கானூரணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் பேசுகையில், " மு.க ஸ்டாலின் நாட்டு மக்களை மறந்துவிட்டார்.
மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை கூறாமல், மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக மக்களுக்கு என்ன செய்தது என்பதை மக்களிடம் தெளிவாக நாங்கள் தெரிவித்து வருகிறோம்.
மதுரையில் பிரம்மாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செக்கானூரணி மக்களின் கோரிக்கையை ஏற்று, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. மிகப்பெரிய துணைக்கோள் நகரம் அமைக்கப்படவுள்ளது.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடம் இனி திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை பேசி ஏமாற்ற முடியாது. மக்களுக்கான அரசாக அதிமுக செயல்பட்டு வருகிறது. மக்களின் ஆதரவு அதிமுகவிற்கு அமோகமாக இருக்கிறது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
TN CM Edappadi Palanisamy Election Campaign at Tirumangalam 25 March 2021