#Breaking பட்டாசு ஆலை வெடிவிபத்து., தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
tn cm announce for virthunagar fire accident relief fund
விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள எரிச்சநத்தம் என்ற பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக இன்று தீவிபத்து ஏற்பட்டது. விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளிக்குமாறு, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
tn cm announce for virthunagar fire accident relief fund