அனைவர் வாழ்விலும் அமைதியான சூழல் நிலவ இறைவனை பிரார்த்திக்கிறேன் - அண்ணாமலை வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிறிஸ்துவ மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "இயேசுபிரான் சக மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே தியாகம் செய்து மீண்டும் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.

புதிய நம்பிக்கையை உருவாக்கும் திருநாளில் அனைவர் வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn bjp leader annamalai wishes for easter festival


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->