பாஜக ஆட்சிக்கு வந்தால்.. - கடலூரில் களமிறங்கி பேசிய அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் நேற்று 81-வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

”தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும். வள்ளலாரின் கொள்கை கருணை மற்றும் வடலூரில் போலீசாரின் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபரபு தாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட செய்தியாளரை களங்கப்படுத்தக் கூடாது. உண்மை செய்திகள் வெளியிடுபவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

INDIA – கூட்டணி ஒரு சீட்டுக்கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கும் போதும் ஜோக்கர் போல் ஒரு கட்சி வெளியேறுகிறது. மக்கள் மன நிலைக்கு எதிராக பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்தால் இந்த நிலை தான் ஏற்படும்” என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn bjp leader annamalai press meet in cuddalore pandruti


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->